சித்திலெவ்வை மரைக்கார், மு. கா.
Abstract:
ஞானதீபம், 19ம் நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தில் கண்டியிலிருந்து வெளிவந்த ஓர் இசுலாமிய பத்திரிகையாகும். இது மாதாந்த இதழாக வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியர் மு. கா. சித்திலெவ்வை மரைக்கார்.
ஞானதீபம் முதல் இதழ் 1892 ஆவணி மாதம் வெளிவந்துள்ளது. ஞானதீபம் இஸ்லாமிய சமய இதழாக காணப்படுகின்றது. இது தமிழ்மொழியில் வெளிவந்தாலும் அரபுச் சொற்களும் கலந்தே உள்ளன. ஞானதீபம் இரண்டாண்டுகளே வெளிவந்துள்ளன. இதன் இறுதி இதழ் 1893ல் வெளிவந்தது.